
வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் முதல் நாள், மலேசியா குறுந்தொற்று கால கட்டத்திற்குள் நுழையவிருக்கும் நிலையில், நீண்ட காலத்திற்குப் பின்னர் , நாட்டில் உலக நிலையிலான தற்காப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
கோலாலம்பூர், டுத்தாமாஸ் Mitec மலேசிய பன்னாட்டு கண்காட்சி மையத்தில், ஆசிய தற்காப்பு சேவை மாநாடும் கண்காட்சியும் நடைபெறவிருப்பதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் தெரிவித்தார்.
அந்தக் கண்காட்சி கடந்த 2018-இல் ஆகக் கடைசியாக நடைபெற்றது. சற்று இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் நடைபெறும் அந்த கண்காட்சிக்கு, 50 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 25,000 வருகையாளர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
