
நடப்பது அம்னோ தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும் பெர்சத்து, பாஸ் கட்சிகளின் தலையீடும் தொடர்பும் இருப்பதை அம்னோ விரும்பாததாலும் குறைந்தபட்ச சம்பளம் வெ,1,500, ஊழியர் சேம நிதியிலிருந்து ‘i-Citra’ மூலம் பணத்தை மீட்பது போன்ற திட்டங்களால் மலாய்க்காரர் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளதாலும் இனியும் தாமதிக்காமல் ஆகஸ்ட் மாதத்திற்கு தேர்தலை நடத்த அம்னோ துடிக்கிறது.
இதன் தொடர்பில் அம்னோ உயர்மட்ட தலைவர்கள் ஐந்து பேர் வீரைவில் சந்தித்து ஆலோசிக்க் உள்ளனர் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் ஃபுவாட் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தை உறுதிசெய்தபின், நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மூலம் அம்னோ காய் நகர்த்தும் என்று தெரிகிறது.
