
மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி Fuziah Salleh, மே மாதம் நடைபெற இருக்கும் கட்சித் தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார்.
மகளிர் பிரிவு செயலாளர் Nor Azrina Surip இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கட்சியில் உறுப்பியம் பெற்றுள்ள 1.2 மில்லியன் பேரில், 40 விழுக்காட்டினர் பெண்கள் என்பதால், பிகேஆர் தலைமைப் பொறுப்புகளில் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.
