
சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே சென்றுவர அனைத்து வாகனங்களுக்கும் ஏப்ரல் 1-முதல் அனுமதி அளிக்கப்படுவதாக போக்குவரவு அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் அறிவித்துள்ளார்.
அதே நாளில் பன்னாட்டு எல்லைகள் திறக்கப்படுவதால், சிங்கப்பூருக்கும் அனைத்து வகையான வாகனங்களுக்கு சென்றுவர அனுமதி அளிக்கப்பட இருப்பதால், சம்பந்தப்பட்ட போக்குவரவு நிறுவனங்கள் இதன் தொடர்பில் உரிய ஏற்பட்டை இப்பொழுது முதலே மேற்கொள்ளலாம் என்றும்..,
இதன் தொடர்பில் வெளிநாட்டு நுழைவுப் படிவத்தை https://vep.jpj.gov.my/. என்ற இணையப் பக்கத்தில் இருந்து போக்குவரவு நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
