
பினாங்கு, Bayan Lepas பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதும் பணத்தை திரும்ப செலுத்த தவறியர்களை மிரட்டி வந்திருப்பதும் தொடக்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Barat Daya மாவட்ட போலீஸ் தலைவர் Kamarul Rizal Jenal தெரிவித்தார்.
