
அரசாங்க சார்பு நிறுவனமான Sapura தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்புடன் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரடி சவால் விடுத்துள்ளார்.
ஜிஎல்சி நிறுவனமான Sapura-வில் 8.9 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. Sapura நிறுவனத்தின் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் இதன் தொடர்பில் நஜீப்புடன் விவாதிக்கத் தயார் என்றும் ரஃபிஸி ரமிலி தெரிவித்திருந்த நிலையில், அன்வாரையும் கூட அழைத்து வரலாம்; நான் விவாதத்திற்குத் தயார் என்று நஜீப் பதில் சவால் விட்டுள்ள நிலையில்..,
Sapura-வின் நலம் கருதியும் நாட்டு நலம் கருதியும் நஜீப்பின் அழைப்பை ஏற்பதாக அன்வாரும் களத்தில் குதித்துள்ளார்.
