25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

ஜிஎல்சி Sapura தொடர்பில்
நஜீப்புடன் விவாதிக்கத் தயார்

அரசாங்க சார்பு நிறுவனமான Sapura தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்புடன் விவாதிக்க தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரடி சவால் விடுத்துள்ளார்.

ஜிஎல்சி நிறுவனமான Sapura-வில் 8.9 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. Sapura நிறுவனத்தின் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் இதன் தொடர்பில் நஜீப்புடன் விவாதிக்கத் தயார் என்றும் ரஃபிஸி ரமிலி தெரிவித்திருந்த நிலையில், அன்வாரையும் கூட அழைத்து வரலாம்; நான் விவாதத்திற்குத் தயார் என்று நஜீப் பதில் சவால் விட்டுள்ள நிலையில்..,

Sapura-வின் நலம் கருதியும் நாட்டு நலம் கருதியும் நஜீப்பின் அழைப்பை ஏற்பதாக அன்வாரும் களத்தில் குதித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles