30.1 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைத் தரைமட்டமாக்கி வருகிறது ஈரான் இராணுவம்!

🔥 Views : 2,820
👁 Reading Now : 22

அமெரிக்கா​ வரம்பு மீறி ஈரானில் தாக்குதல் நடத்தி வருவதால் வெகுண்டெழுந்த ஈரான் இராணுவம் அமெரிக்கத் தளங்களை குறி வைத்துத் தாக்கத் தொடங்கி உள்ளது.

மோதல் முற்​றி​யுள்​ளதையடுத்து குவைத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் கடுமையான தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது.

அமெரிக்கா​வுக்​கும் ஈரானுக்​கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்​போது அண்டை நாடு​களுக்​கும் பரவி புதிய உச்​சத்தை எட்​டி​யுள்​ளது. 

அமெரிக்​கா​வின் தொடர் வான்​வழித் தாக்​குதல்​களுக்​குப் பதிலடி கொடுக்​கும் வகை​யில், ஈரான் கண்​ணுக்கு கண் அதாவது ‘பழிக்​குப்​பழி’ வாங்​கும் தனது ராணுவ நடவடிக்​கை​யின் மூன்​றாம் கட்​டத்​தைத் தொடங்​கி​யுள்​ளது.

ஈரான் தனது முதற்​கட்ட நடவடிக்​கை​யில் ஜோர்​டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்​படை தளத்​தைக் குறி​வைத்து தாக்​கியது. அங்​குள்ள அமெரிக்​கா​வின் பல ஆயுதக் கிடங்​கு​களும் எரிபொருள் நிலை​யங்​களும் தீக்​கிரை​யாக்​கப்​பட்​டன. 

2-ஆவது கட்​ட​மாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்​படை, விமானப்​படைக்​குச் சொந்​த​மான ஷேக் ஈசா ராணுவ தளம் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles