
தனித்து வாழும் தாயான Loh Siew Hong, தம் மீது போலீசில் பொய்ப் புகார் அளித்திருப்பதாகக் கூறியுள்ள மத போதகர் Firdaus Wong, இதன் தொடர்பில் இவரும் போலீசில் புகார் செய்துள்ளார்.
தன்னுடைய பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்டுள்ளனர் என்று Loh Siew Hong எழுப்பியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், நீதித் துறை சீராய்வினை மேற்கொள்வதற்கு எதிராக நெருக்குதல் தரும் வகையிலான காணொளியை தமது தரப்பு வெளியிடவில்லை என தற்போது கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் Firdaus Wong கூறியுள்ளார்
