25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

எரிசக்தி, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த அன்வார் – புதின் பேச்சுவார்த்தை!

🔥 Views : 6
👁 Reading Now : 47

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, எரிசக்தித் துறை இரு நாடுகளுக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருப்பதாக இரு தலைவர்களும் வலியுறுத்தினர். குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத் துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பை வழங்குவதற்கான ரஷ்யாவின் உறுதிப்பாட்டை மலேசியா வரவேற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்தனர். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய தொழில்நுட்பங்கள், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, நவீன விவசாயம் மற்றும் மருந்துத் துறை உள்ளிட்ட எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அன்வார் மற்றும் புதின் விவாதித்தனர். இந்த சந்திப்பு, மலேசியா–ரஷ்யா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles