
கார் பெட்டரியைப் பயன்படுத்தி மீன் பிடித்தபோது ஏற்பட்ட மின் அதிர்வினால் தந்தையும் மகனும் பலியாகினர்.
தெமர்லோ Kuala Krau செம்பனை தோட்டம், ஆற்றோரப் பகுதியில் பூர்வ குடியினரான 45 வயது ஆடவரும் அவரின் 16 வயது மகனும் இறந்ததாக பகாங் மாநில போலீஸ் தலைவர் ரம்லி முகமட் தெரிவித்தார்.
சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்ற அவர்கள் வீடு திரும்பாததைத் தொடர்ந்து கம்போங் பாயா சென்டாயான் மக்கள் அவர்களை தேடிச் சென்றனர். அப்போது அந்த இருவரும் ஆற்றோரத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு போலீசிற்கு தகவல் கொடுத்ததாக ரம்லி முகமட் தெரிவித்தார்.
