
இவ்வாண்டு ஹரிராயா பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் சாலைகளில், ஏறக்குறைய 47 லட்ச வாகனங்கள் பயணிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக, புக்கிட் அமான் போக்குவரத்து -அமலாக்க விசாசரணை துறையின் இயக்குநர் Datuk Mat Kasim Karim தெரிவித்தார்.
வாகன போக்குவரவு சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்ய 6,559 போக்குவரத்து அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்.
கோவிட் கட்டுப்பாடுகளினால் கடந்த ஈராண்டாக சொந்த ஊர்களுக்கு திரும்பாமல் இருந்த மலேசியர்கள், இம்முறை அந்த விடுமுறையை பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
