
வெளிநாட்டு வாகனப் பதிவு எண் கொண்ட கார்களுக்கு RON 95 எரிபொருளை விற்க தடை இருக்கும் நிலையில் , அந்த தடையை மீறும் எண்ணெய் நிலைய மேம்பாட்டாளர்கள் மீதே நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக, வெளிநாட்டு தனிபர்கள்மீது நடவடிக்கை எடுக்க இயலாது என ஜோகூர் மாநில உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சின் இயக்குநர் Mohd Hairul Anuar Bohro தெரிவித்தார்.
அந்த எரிபொருள் விற்பனை தொடர்பான சட்டம் குறித்து , எண்ணெய் நிலைய மேம்பாட்டார்கள் வர்த்தக உரிமத்தை கோரும்போதே அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.
