
சிப்பாங் சுங்கை பீளேக் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் இடையே கேலி, கிண்டலின் விளைவாக சண்டை மூண்டது.
நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 7 மாணவர்கள் சண்டையிட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
ஆசிரியர்கள் தலையிட்டு சண்டையிட்ட மாணவர்களை விலக்கிவிட்ட அந்த சம்பவம் குறித்து
போலீஸ் புகார் செய்யப்படவில்லை என்றாலும், சண்டையிட்ட மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டிருப்பதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் Wan Kamarul Azran Wan Yusof தெரிவித்தார்.
