
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னதாகவே கட்சித் தாவல் தடைச்சட்டத்தை அமல்படுத்தும்படி ஜசெக Teluk Intan நாடாளுமன்ற உறுப்பினரான Nga Kor Ming அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம் இதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என நேற்று நடைபெற்ற சிறப்பு நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் வலியுறுத்தினார்.
அந்தச் சட்டம் எப்போதிருந்து அமலுக்கு வரும் என்பது குறித்தும் அரசாங்கம் உறுதி அளிக்க வேண்டும். அதோடு மே மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கான தேதியையும் நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் Wan Junaidi Tuanku Jaafar அறிவிக்க வேண்டுமென Nga Kor Ming கேட்டுக்கொண்டார்.
