
எதிர்வரும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் தாம் தலைவர் பதவியிலிருந்து விலகும் திட்டத்தை கொண்டிருக்கவில்லையென டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனவே அடுத்த மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் பி.கே.ஆர் தலைவர் பதவியை தற்காத்துக்கொள்வதற்கு போட்டியிடப் போவதாக பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவருமான அன்வார் கூறினார்.
தமது தலைவர் பதவியை தற்காத்துக்கொள்வதற்கான மனுவை இணையத்தின் வாயிலாக அவர் சமர்ப்பித்தார். பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் ஏப்ரல் 22 முதல் 29ஆம் தேதிவைரை நடைபெறும். அக்கட்சியின் தேசிய பேராளர் மாநாடு ஜூன் 10ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
