
வெளிநாட்டுக் கடனை திரும்பச் செலுத்தும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இப்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகுவதை தடுக்கும் பொருட்டு அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் மத்திய பொருளகத்தின் கவர்னர் P. Nandalal Weerasinghe அறிவித்துள்ளார்.
குறைந்த அளவிலான அந்நியச் செலாவணியை பயன்படுத்தி எரிபொருள் போன்ற முக்கிய பொருளின் இருக்குமதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்தும் விவகாரத்தில் மறுசீரமைப்பு செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படும் என அவர் விவரித்தார்.
