
ஊழியர் நல நிதி சந்தாதாரர்கள், தங்களின் 2-ஆவது கணக்கில் இருந்து 10ஆயிர வெள்ளியை மீட்டுக் கொள்ள அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ள நிலையில், அதை மீட்பதற்காக இபிஎஃப் அலுவலகங்களுக்கு அதிகமான சந்தாதாரர்கள் படையெடுத்ததால் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இபிஎஃப் சந்தாதாரர்கள் செலுத்தும் சந்தாத் தொகையில் 30% பகுதி, 2-ஆவது கணக்கில் சேமிக்கப்படுகிறது. சந்தாதாரர்களின் எதிர்கால மருத்துவ சேவை, பிள்ளைகளுக்கான கல்வி, வீட்டு பராமரிப்பு உள்ளிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்தக் கணக்கில் இருந்து பணத்தை துடைத்து எடுக்கும் சந்தாதாரர்கள் எதிர்காலத்தில் சிக்கலை எதிர்நோக்க நேரிடும் மறந்து இன்று அவசரப்படுகின்றனர்.
