
மாட்சிமைசால் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தஃபா பில்லா ஷா-ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹஜா அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா இணையர் பிரதமர் தம்பதியர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்களுடனும் வெளிநாட்டு தூதர்களுடனும் நேற்று அரண்மனையில் நோன்பு துறந்தனர்.
தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட், அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுகி அலி, முன்னாள் பிரதமர் நஜீப், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
ஏமன், துருக்கி, சௌதி அரேபியா, சிரியா, ஜோர்டான், எகிப்து, செனிகல், போஸ்னியா ஹெர்சஹொவினா, பாலஸ்தீனம் ஈராக், அஸர்பைஸான், பாஹ்ரைன், தாய்லாந்து, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், இந்தியா, புரூணை நாடுகளின் தூதர்களும் இதில் கலந்து கொண்டனர்.
