
15வது பொதுத் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராவதற்கு ஏதுவாக பிகேஆர் கட்சித்தேர்தல் செம்மையாகவும் எழுச்சியுடனும் நடத்தப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலத்தில் பிகேஆர்மீது எழுந்துள்ள எதிர்மறையான விமர்சனம் குறித்து கருத்து தெரித்த பொதுச் செயலாளர் நசுத்தியோன், பிகேஆர் இப்பொழுது நாளுக்கு நாள் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. அதற்கு ஏற்ப கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிம் கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சி வருகிறார் என்றும் கூலிம் பண்டார் பாரு எம்பி-யுமான நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
