
இஸ்லாமியப் பெருமக்கள் ஹஜ் புனித யாத்திரைக்காக சௌதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்வதன் தொடர்பில் உரிய பத்திரங்களை ஒழுங்கப்படுத்தவும் விநியோகிக்கவும் ஏதுவாக நாட்டில் உள்ள அனைத்து கிளைகளும் நாளை ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்கும் என்று Tabung Haji அறவாரியம் அறிவித்துள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் மானிய நிதிக்கான கடிதத்தை வழங்க வேண்டி இருப்பதால், பெரும்பாலான மாநிலங்களில் நாளை விடுமுறை தினமாக இருந்தாலும் அலுவலகங்கள் திறக்கப்படுவதாக ஹஜ் அறவாரியத்தின் இடைக்கால நிருவாக இயக்குநர் Mohamed Ameen Abdul Wahab தெரிவித்துள்ளார்.
