
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம்இன்று புதன்கிழமை முதல் மூடப்படுகிறது என இளைஞர் விளையாட்டு அமைச்சர் Datuk Seri Ahmad Faizal Azumu தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில், அடுத்தாண்டு மார்ச் இறுதியில், சீரமைப்பு பணிகளுக்காக தேசிய அரங்கை மூட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் , அந்த அரங்கை உடனடியாக சீரமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கின் தரம் அதன் கட்டமைப்பு வசதிகள் உட்படுத்திய விவகாரத்தை அமைச்சு கடுமையாக கருதுகிறது. அத்துடன் நாட்டின் பெருமையின் அடையாளமாகவும் விளங்கும் தேசிய அரங்கை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை இனியும் தாமதப்படுத்த இயலாது எனவும் Ahmad Faizal Azumu குறிப்பிட்டார்.
