
அரச உழியர்களும் விவசாயம் செய்து உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இலங்கை அரசு, பொதுச் சேவை துறைகளுக்கான வேலை நாட்களை, 4 நாட்களாக குறைத்திருக்கின்றது. அந்நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பொதுச் சேவை ஊழியர்களாக உள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து, அவர்கள் வேலையிடங்களுக்கு பயணிப்பதும் சிரமமாகயிருப்பதால் , அடுத்த மூன்று மாதங்களுக்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளுடன் கூடுதலாக வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.
