
தன் தாயின் உடலை 15 துண்டுகளாக வெட்டி, கழிவு நீர்த் தொட்டியில் வீசிய 42 வயது Ng Yu Lim மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஈப்போ, பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த ஆடவன்மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவனிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கு மீண்டும் ஜூலை 27-ஆம் தேதி செவிமடுக்கப்படும் வேளையில், உளவியல் கண்காணிப்புக்காக அந்த ஆடவனை ஒரு மாதத்திற்கு Ulu Kinta Bahagia மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்படி நீதீமன்றம் உத்தரவிட்டது.



