
நீதிமன்றத்தை அவமதித்ததாக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் Tommy Thomas-ஐக் குற்றஞ்சாட்டும்படி கோரும் மேல் முறையீட்டு வழக்கை மறைந்த தீயணைப்புப் படை வீரர் Muhamad Adib Mohd Kasim குடும்பத்தினர் மீட்டுக்கொண்டனர்.
மரண விசாரணை தொடர்பான தமது அறிக்கை தொடர்பில் நீதிமன்றத்தை அவமதித்ததாக முகமட் அடிப்பின் தந்தை Tommy Tomas சிற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். Adib குடும்பத்தினரும் சட்டத்துறை தலைவரும் தங்களது மேல்முறையீடுகளை மீட்டுக்கொண்டதாக முகமட் அடிப்பின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான Mohd Zubir Embong வழக்கறிஞர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டது.
