
15-ஆவது பொதுத் தேர்தலில் வெற்றிதான் இலக்கு; அதற்காக துரோகக் கூட்டத்துடன் ஒருகாலும் இணைய முடியாது; அது தனிப்பட்ட தவளையாக இருந்தாலும் சரி, கட்சியாக இருந்தாலும் சரி, ஜசெக நிலையில் மாற்றம் இல்லை என்று அதன் தலைவர் லிம் குவான் எங் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
நஜீப்புடன் இணைந்து 2020-இல் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த ஷெரட்டன் நகர்வு கூட்டத்துடன், குறிப்பாக இன-சமய அடிப்படையில் காய் நகர்த்தியவர்களுடன் இணைந்து செயல்படவே முடியாது.
அஸ்மின் அலியை மட்டுமாவது சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அது தற்கொலைக்கு சமம் என்று லிம் ஆவேசம் தெரிவித்துள்ளார்.
