
மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கி, ஒரு மாத காலத்திற்கு இலவச பொதுப் போக்குவரவு வசதியை அரசு ஏற்படுத்தி இருப்பதால், இந்த சேவையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை இன்று திடீரென்று அதிகரித்து காணப்பட்டது.
ஏதோ ஒருவித ஆர்வத்தினாலும் புதிய இலகு ரக ரயில் சேவையைப் பயன்படுத்திப் பார்ப்போமே என்ற எண்ணத்தினாலும் குறிப்பாக இலவசம் என்பதாலும் பொதுமக்கள் இப்படி முன்வந்திருக்காலாமேத் தவிர, அரசு சில தொலைநோக்கு நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், இந்த நிலைமை தற்காலிகமானதே என்று தெரிகிறது.
முதலில், அரசாங்க அதிகாரிகளும் தலைவர்களும் பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தி முன்மாதிரியாக விளங்க வேண்டும். பெட்ரோல், டீசலுக்கான மானியத்தை விலக்கிக் கொண்டு, கார் நிறுத்துமிடக் கட்டணத்தையும் அரசு அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் பரிந்துரைக்கப்படுகிறது.
