
அண்மையில் ஆசிய கிண்ண ஹாக்கிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மலேசிய ஹாக்கி குழுவுக்கும் வெகுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென பி.கே.ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டியில் மலேசியா இரண்டாவது இடத்தைப் பெற்றதன் மூலம் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளதையும் அரசாங்கம் கவனத்திற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆசிய கிண்ண காற்பந்து போட்டிக்கு மலேசியா தகுதி பெற்றதைத் தொடர்ந்து தேசிய காற்பந்து குழுவுக்கு வெகுமதி வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri கூறியிருந்த நிலையில் அன்வார் இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
