
கோவிட்-19 பரவலைத் தடுக்கும் முகமாக அரசத் தரப்பில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்றிதழை மலேசியாவும் இந்தியாவும் இருதரப்பு சம்மத அடிப்படையில் ஒப்புக் கொண்டுள்ளன.
இதன் தொடர்பில் இந்தியாவுக்கான மலேசியத் தூதர் Datuk Hidayat Abdul Hamid மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ்திசை நாடுகளுக்கான செயலாளர் Saurabh Kumar ஆகிய இருவரும் நேற்று புது டில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன், மலேசிய வெளியுறவு அமைச்சர் Datuk Seri Saifuddin Abdullah ஆகிய இருவரின் முன்னிலையில் ஒப்பந்தப் பத்திரங்களை பரிமாறிக் கொண்டனர்.
