
மலேசியா, இங்கு வாழ்கின்ற அகதிகளின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது என்று அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவரான காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இந்த மண்ணில் அகதிகளாக வாழ்பவர்கள், தங்களுக்கான கல்வி, சுகாதாரம், சுதந்திரம் போன்ற கூறுகளின் அடிப்படையில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளைப்பற்றி மத்தியக் கூட்டரசு பரிசீலிக்க வேண்டும்.
புலம் பெயர்ந்து வாழ்கின்ற அகதிகளின் உரிமையும் கண்ணியமும் மதிக்கப்பட வேண்டும் என்று ஜோகூர் முன்னாள் மந்திரி பெசாருமான அவர் தெரிவித்துள்ளார்.
