
சுற்றுப் பயணிகள் குறைந்ததுதான் சுபாங்கிலிருந்து பங்கோர் தீவுக்கான விமானச் சேவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுவதை பேரா மந்திரிபுசார் டத்தோ சராணி முகமட் மறுத்தார்.
விமானத்தில் பயணிப்பதற்குப் பதிலாக பெரும்பாலான சுற்றுப்பயணிகள் சொந்த வாகனத்தில் பயணம் செய்து பெர்ரி மூலம் பங்கோர் தீவுக்கு வருகை புரிகின்றனர்.
பேரா சுற்றுலாத்துறையின் நீடித்த சுற்றுலா அறிமுக நடவடிக்கையினால் பங்கோர் தீவுக்கு வருகைபுரியும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் சராணி முகமட் தெரிவித்தார்.
