
பணமோசடி, குற்றவியல் நம்பிக்கை மோசடி-CBT தொடர்பில் 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ள முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஹாஹிட் ஹிமிடி தன்மீதான ஊழல் வழக்குகளுக்கு தடைகோரி விண்ணப்பித்துள்ளார்.
அவர் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு திட்டங்களுக்காக லஞ்சம் பெற்றதாகவும் யாயாசான் அகல்புடி-யிடம் இருந்து மில்லியன் கணக்கான வெள்ளியை முறைதவறி பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட சாட்சி அறிக்கைகளைப் பெறுவதற்காக, மே மாதம் அவர் செய்த மேல்முறையீட்டின் முடிவு நிலுவையில் உள்ள நிலையில், தன்மீதான ஊழல் வழக்கை நிறுத்திவைக்கக் கோரி விண்ணப்பித்துள்ளார்.
