
போலி அடையாளக் கார்டுகளைத் தயாரித்து அவற்றை தமது கும்பலின் மூலம் விநியோகம் செய்து வந்த பார்ட்டி பெர்பாடுவான் ரக்யாட் சபாவின் தலைவர் அர்ஷாட் அப்துல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார். சுபாங் ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஜூன் 22ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டுதோ அவருக்கு உதவியாகச் செயல்பட்ட அம்கா அமாட் என்பவரும் கைது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அர்ஷாட் அந்தக் கட்சியைத் தமது சுப லாபத்திற்காகப் பயன்படுத்தியதாக ஹம்ஸா குற்றம் சாட்டினார்.
