
நாட்டில் அதிகரித்து வரும் பொருள்களின் விலையேற்றம் பயனீட்டாளர்களுக்குப் பெரும் பிரச்சினையாக உருவாகாது என்று விவசாயம், உணவு தொழில்துறை துணையமைச்சர் Nik Mohd Zawawi) நிக் முகமட் ஸவாவி சாலே சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்ற நாடடுகளூடன் ஒப்பிடும்போது, மலேசியாவின் நிலை படுமோசமாக இல்லை என்றும் இங்கு அரசு மக்களுக்கு தொடர்ந்து உதவும் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வட்டாரத்தில் மலேசியாவில் மட்டுமே அரசு பெருந் தொகையை உதவி நிதியாக வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
கோழி, முட்டைக்கான உச்ச வரம்பு விலையை விதித்து, வாழ்க்கைச் செலவினத்தை அரசு குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முட்டையின் விலையைக் கட்டுப்படுத்த, அதன் விலையையும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
