
கூட்டரசு விரைவுச் சாலையின் 32.8 ஆவது கிலோ மீட்டரில் எதிர்திசையில் காரை ஓட்டிச்சென்ற 72 வயது முதியவர், எதிரே வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டார்.
இந்த விபத்து நேற்று அதிகாலை 1.45 மணியளவில் நேர்ந்ததாகவும் அம்முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. தொடக்கக் கட்ட விசாரணையில் அந்த முதியவர் காரை எதிர்திசையில் காரைச் செலுத்தி, எதிரே வந்த வாகனத்தோடு மோதியதில் அந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிகிறது.
