
கடந்த சனிக்கிழமை பண வீக்கம், விலைவாசி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பிகே ஆர் இளைஞர்களைப் போலீசார் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக அதன் தலைவர் Adam Adli (அடாம் அடீ) குற்றம் சாட்டினார்.
அந்தப் போராட்டங்கள் நடந்த பின்னர், போலீசாரின் இம்மாதிரியான அராஜம் தொடர்கதையாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
கருத்துகளையும் அதிருப்தியையும் தெரிவிக்க மக்களுக்கு உரிமை இருப்பதை அமலாக்கத்துறை கவனத்தில் கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
எங்களைப் போலீசார் அடிக்கடி அச்சுறுத்துவதை விடுத்து, ஊழல் பேர்வழிகள், அரசியல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வெண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
