
மக்களிடையே நிலவும் செல்வ பாகுபாட்டைக் குறைக்க தமக்கு எண்ணம் இருந்தாலும், அதிகாரம் கையில் இல்லாததால் தாம் வருத்தம் அடைவதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
நேற்று தமது 97ஆவது வயதை எட்டிய அவர், நகற்புற மக்களை விட கிராமப்புற மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வைக் கண்டு தாம் கவலையடைவதாகக் குறிப்பிட்டார்.
தாம் மக்களுக்காகப் பல காரியங்களைச் செய்ய நினைப்பதாகவும் ஆனால், பிரதமர் பதவியில் இல்லாததால் தம்மால் அதனைச் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
