
விரைவில் நடைபெறவிருக்கும் கெ அடிலானின் மத்திய செயலவைக்குத் தாம் போட்டியிடுவதால் கட்சியினர் தம்மை ஆதரித்து கட்சியை வளப்படுத்த உதவுமாறு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார்.
தமது தேர்தல் எண் 67 என்றும் தாம் வெற்றி பெற்றால் கட்சியை வலுப்படுத்தி அதன் போராட்டங்களை முன்னின்று நடத்தி, கட்சி சிறப்பாகச் செயல்பட வைக்க தம்மால் முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்துக்கு என்றென்றும் விசுவாசமாகவும் பக்கபலமாகவும் இருக்கப் போவதாகவும் அவர் உறுதி கூறினார்.
