
கெடா, பாலிங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதற்கு குனோங் இனாஸில் உருவாக்கப்படும் மூசாங் கிங் டுரியான் தோட்டம் காரணமல்லவென கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி மாட் நோர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
2020இல் பழத் தோட்டம் அமைக்கும் வேலைக்குத் தடை விதிக்கப்பட்ட வேளையில், இவ்வாண்டு ஏப்ரலில் நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் அத்திட்டத்திற்கு 2,000 ஹெக்டர் நிலம் ஒதுக்கப்பட்டு, சனுசி அதற்கான அதிகாரபூர்வ கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
காட்டை அழித்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் கடுமையான வெள்ளத்தின் காரணமாக மரங்களும் கட்டைகளும் சேறுமாக அடித்துச் செல்லப்பட்டு சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பழத் தோட்டம் வெள்ளத்திற்கு காரணமில்லை என்று கூறுவது தவறாகும்.
