
சிறைச்சாலையில் நிகழும் மரண சம்பவங்கள் குறித்து தமது ட்விட்டர் முகநூல் வாயிலாக உள்துறை அமைச்சுக்கு கடுமையான கண்டனத்தை பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் இன் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்காக அழைத்து சென்ற பின்னர் காவல் நிலையம் வரை சென்று பிறகு நீதிமன்றத்தின் சட்ட விதியின்படி சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு செல்லும் இளைஞர்கள் திடீரென்று மரணம் அடைந்த சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார். இவ்வாண்டில் மட்டும் சிறைச்சாலையில் மரண சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும், உள்துறை அமைச்சும் தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் தேசிய பொலீஸ் தலைமையகம் எந்த ஒரு பதிலையும் தராது இருப்பது நமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அவர் கூறினார்.
