
நாட்டில் 3 மில்லியன் மனைவிமாருக்கு Socso (சொக்சோ) காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் வீட்டில் இருக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு அவர்கள் சொக்சோ இழப்பீட்டை பெற சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
காயத்தைப் பொறுத்து சொக்சோவின் காப்புறுதி இழப்பீடு 500லிருந்து 50,000 ரிங்கிட் வரை அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கட்டமாக அரசு அதற்கென 20 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி இருப்பதாகவும் இதன் மூலம் பி40 பிரிவு குடும்ப மாதர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் கணவன்மார்கள் தங்களின் மனைவிக்கு ஓராண்டு காலத்திற்கு 120 ரிங்கிட்டை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
