
அண்மையில் மலாக்கா மாநிலத்தில் 648 ஆசிரியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மனக் கவலை, மன உளைச்சல், மன இறுக்கம் தொடர்பான பரிசோதனையில் 23 ஆசிரியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 13,976 ஆசிரியர்கள் இருப்பதாகவும் அவர்களின் மன நிலையைப் பரிசோதிக்கும் நடவடிக்கை படிப்படியாக நடந்து வருகிறது ஆசிரியர்கள் பிரச்சினை இன்றி இருந்தால்தான் அவர்களால் சிறந்த முறையில் பாட போதனையை நடத்த முடியும் என்று மாநில சுகாதார, போதைப் பொருள் தடுப்புக் குழுவின் தலைவர் டாக்டர் Mohd Akmal Saleh (முகமட் அக்மால் சாலே) தெரிவித்தார்.
