பிகேஆரின் செயலவை உறுப்பினர் ஜே.கேரன் கஸ்தூரி நேற்று சிலாங்கூரில் சில பள்ளிகளுக்குச் சென்று அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
மாணவர்களின் வருகை, காலம் கடந்து பள்ளிகளில் பதிவு, ஆவணமற்ற குழந்தைகளின் பதிவு போன்றவற்றைத் தாம் கேட்டறிந்ததாக அவர் தெரிவித்தார்.
சுந்திர தினக் கொண்டாட்டம் சம்பந்தமாகப் பள்ளிகள் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது தம்மை மிகவும் கவர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
தலைமையசிரியர்கள் ஆசிரியர்களின் சேவை மிகவும் போற்றத்தக்கதாக இருப்பதைத் தாம் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்குத் தேவையாக சில அத்தியாவசியப் பொருள்களைத் தாம் வழங்கியதாகவும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்றும் தாம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.