
டாக்சியோட்டியான அண்ணன் தமது தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்ற பின்னர், தாமும் அதே கத்தியால் குத்தித் தற்கொலை புரிந்து கொண்டார். இந்த அசம்பாவிதம் ஈப்போ, ஹவுசிங் டிரஸ்ட், ஜாலான் முகமட் நாஸே எனுமிடத்தில் அவர்களின் வீட்டில் நேர்ந்துள்ளது. 69 வயதான அண்ணனுக்கும் 67 வயதான தம்பிக்கும் காலையில் தகராறு மூண்ட பின்னர், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் என்ன காரணத்தினால் இந்த நிலைக்கு ஆளாயினர் என்பது புரியவில்லை. எனினும், அவர்களுக்குள் அடிக்கடி இம்மாதிரியான வாக்குவாதம் நிகழ்வது வழக்கமான ஒன்று என்று தெரிய வருகிறது.
