
தமது மேல் முறையீட்டு வழக்கை கூட்டரசு நீதிமன்றத்தில் நடத்த பிரிட்டனின் Queens Council (குயீன்ஸ் கவுன்சில்) எனும் பிரபல Jonathan Laidlaw’s வழக்கறிஞரை நியமிப்பதை கூட்டரசு நீதிமன்றம் அனுமதிக்கவிலை. மேலும், புதிய வழக்கறிஞர் ஹிஷாம் தே போ தீக், வழக்கை முழுமையாக ஆராய, 3லிருந்து 4 மாதத் தவணை கேட்டதும் மறுக்கப்பட்டது. இந்நிலையில், எஸ்ஆர்சி வழக்கில் தமது சார்பில் வாதத்தை எடுத்துரைக்க வழக்கறிஞர் இல்லாமல் தாம் தவிப்பதாக நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார். இது முக்கியமான வழக்காகவும் தமக்கு வாழ்வா சாவா என்ற நிலையில், தமக்கு நேர்மையான, பாரபட்சமற்ற நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்று நஜிப் தமது ஆதங்கத்தைத் வெளிப்படுத்தியுள்ளார்
