33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

டமான்சாரா பகுதியில் வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்த கும்பலின் மூவர் கைது

சிலாங்கூர், கோலாலம்பூர், பேராக் ஆகிய மாநிலங்களில் வீடு புகுந்து திருடுவதோடு கார்களையும் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த மூவர் டாமன்சாரா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெஸ்தாரி ஜெயாவில் ஆகஸ்டு 29ஆம் தேதி காலை 3 மணியளவில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, மூவர் கைது செய்யப் பட்டதாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி காசா தெரிவித்தார்.
சிசிடிவியின் உதவியோடு அவர்கள் பயன்படுத்திய திருடப்பட்ட காரைப் பின் தொடர்ந்த போலீசார், அவர்களை டாமன்சாரா பகுதியில் காலை 2 மணியளவில் கைது செய்தனர்.
29லிருந்து 37 வயதான அவர்களுக்குப் போதைப்பொருள், கிரிமினல் குற்றப் பதிவுகள் உள்ளன.
அவர்களிடமிருந்து 210,000 ரிங்கிட் பெறுமான இரு லோரிகள், 6 வேன்கள், 3 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles