
பெல்டாவின் முன்னாள் தலைவர் Shahrir Samad (ஷாரிர் சமாட்) சுத்ரா கார் நிறுவனத்தின் பப்ளிக் வங்கியில் கணக்கில் 118,484 ரிங்கிட் பெறுமான காசோலயைச் செலுத்தியதாக அவ்வங்கியின் அதிகாரி Seah Yeow Hwee (சியா யியோவ் ஹ்வீ (59) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்தக் காசோலை 2013 டிசம்பர் 21ஆம் தேதி செலுத்தப் பட்டதாகத் தெரிவித்தார்.
நஜிப் ரசாக்கிடமிருந்து ஒரு மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்ற அவர், அதனை தமது வருமான வரிக் கணக்கில் காட்டத் தவறியதால் அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவர் பெற்ற ஒரு மில்லியன் ரிங்கிட் பணத்திலிருந்து காருக்கான பணம் செலுத்தப்பட்டதாக அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
