
நாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கருத்து வேறுபாடுகளைக் கலைந்து, சொந்த முயற்சியில் முன்னேற வழி காண வேண்டுமென உலு சிலாங்கூர் பிகேஆர் தலைவர் டாக்டர் சத்தியபிரகாஷ் கேட்டுக்கொண்டார்.
நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் இந்திய சமூகம் வறுமை, கல்வியின்மை, வேலையின்மை, சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே இருப்பது, நீடிப்பது அவலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல காலமாக நம்மை கைதூக்கி விடுவார்கள் என்று ஒரு கட்சியையே நம்பிருப்பதை விட்டொழித்து விட்டு, நமக்கு எந்த அரசியல் கட்சி உதவி செய்யும் என்பதை உணர்ந்து அதனை ஆட்சியில் அமர்த்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
