
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளித் தலைமை ஆசிரியை தமது சொந்த நிறுவனத்திலிருந்து பள்ளிக்கான பொருள்களை வாங்கிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.
சுங்கை பட்டாணியில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியை 2019லிருந்து 2021ஆம் ஆண்டு வரை அக்குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
58 வயதான அவர் சுங்கை பட்டாணி எம்ஏசிசி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அவரின் இரு மகன்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருந்த 2 நிறுவனங்களில் அவர் ரிம. 22,646 பெறுமான பொருள்களை வாங்கியது கண்டு பிடிக்கப்பட்டது.
ரிம. 10,000 பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
