
கெடா போலீஸ் தலைமைகத்தின் கார் பட்டறையில் வைக்கப்பட்டிருந்த 13 வாகனங்கள் நேற்று காலையில் தீ சம்பவத்தில் எரிந்து சாம்பாலாயின.
காலை 4.45 மணியளவில் நேர்ந்த அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மாநிலப் போலீஸ் தலைவர் ஹசான் அமாட் தெரிவித்தார்.
தீயினால் போக்குவரத்து அலுவலகம், கார் பட்டறை, உபகரணங்கள், போலீசாரின் 13 வாகனங்களும் எரிந்து சாம்பலாயின.
