
வயிற்று வலி, அல்சர் நோயினால் அவதியுறும் நஜிப் ரசாக்கிற்கு முறையான சிகிச்சை அளிக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உத்தரவிட வேண்டுமென அவரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அல்சர் நோயினால் 15 ஆண்டு காலம் அவர் அவதிப்படுவதாகவும், சிறைக்குச் சென்ற பின்னர் அது கடுமையாக அதிகரித்துள்ளது. அவருக்கான உயர் ரத்த அழுத்த மருந்து மாற்றப்பட்ட பின்னர், நஜிப்பின் அழுத்தம் உயர்ந்து பதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரை மருத்துவமனையில் தங்க வைத்து சிசிச்சை தர வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர் காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார்,
1எம்டிபி வழக்கு பாதியிலேயே நிறுத்தப்பட்டபோது, வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் அவர் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
